30 March 2011

நம் வழி தோனி வழி!

Posted by Gunalan Lavanyan 11:13 PM, under | 1 comment


பாகிஸ்தானும் இந்தியாவும் இன்று மோதிய உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாத்தில் இந்தியா வீழ்த்தியது. இதன்மூலம் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்தியா மூன்றாவது முறையாக தகுதி பெற்றிருக்கிறது.







இந்திய வீரர்களின் சில மகிழ்ச்சித் தருணங்கள்...


இதற்குமுன் 1983இல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் கபில்தேவ் இந்தியாவுக்கு கோப்பையை கைப்பற்றிக் கொடுத்தார். அதேபோல கங்குலி தலைமையிலான அணியும் 2002இல் உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் வெற்றியை பறிகொடுத்தது.

ஆனால், நடைபெற்றுவரும் 2011 உலகக் கோப்பை போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி காலிறுதியிலேயே ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து பழிதீர்த்துக்கொண்டது. இப்போது அரையிறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியதன் மூலம் வலுவான நிலையில் இலங்கை அணியை எதிர்கொள்ளப் போகிறது.

புதனன்று நடைபெற்ற அரையிறுப் போட்டியின் கதாநாயகனே எல்பிடபிள்யூதான்! இந்திய வீரர்களும் சரி, பாகிஸ்தான் வீரர்களும் சரி அதிக அளவில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார்கள்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஆனால், சச்சின் 85, சேவாக் 38, ரெய்னா 36, கம்பீர் 27 ரன்கள் எடுத்து அணி 260 ரன்கள் சேர்க்க உதவினர். இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர். ஒருகட்டத்தில் அதோகதிதான் என்று இருந்தபோது, நெஹ்ராவின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். அதேபோல பந்துவீச்சில் யுவராஜ் சிங், முனாஃப் படேல், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான் ஆகியோரும் தலா 2 விக்கெட் கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

நெஹ்ரா இன்று பந்துவீசப் போகிறார் என்று தெரிந்ததும், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தோனி தவறான முடிவு எடுத்திருக்கிறார் என்று பேசினார்கள். ஆனால், எப்போதும் தோனி பல முயற்சிகளையும் பரிசோதனைகளையும் செய்து பார்க்கும்போது அது வெற்றியையே அதிகம் தந்திருக்கிறது. சில நேரங்களில் தோல்வி ஏற்படும்போது துவண்டுபோகாமல் எப்போதும் புதிய அனுகுமுறையும், புதிய முயற்சியும் செய்து பார்ப்பதில் தோனி வல்லவர். அதை இந்த முறையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

உலகக் கோப்பையையும் இந்தியா வெல்லும் என்று நம்பிக்கையோடு இருப்போம்!

நம் வழி தோனி வழி!

1 comments:

வெற்றி நிச்சயம் அய்யா. உங்கள் கணிப்பு மட்டுமில்ல எல்லோருடைய கனவும் நனவாகும். உரக்க கத்தனும் போல இருக்கிறது ஜெய்ஹிந்த்...

Post a Comment