02 February 2010

சிற்றின்பம் சார்ந்த சிற்பங்கள்

Posted by Gunalan Lavanyan 12:28 AM, under | 1 comment



கஜுராஹோ  மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கிறது. இந்திய சுற்றுலாத் தளங்களில் மிகவும் புகழ்பெற்ற  ஒன்றான கஜுராஹோ, மிக அதிக அளவிலான இந்து மற்றும் சமணக் கோயில்களைக் கொண்டிருக்கிறது. இது சிற்றின்பம் சார்ந்த சிற்பங்களுக்குப் புகழ் பெற்றது. கஜுராஹோ தொகுதி நினைவுச்சின்னங்கள் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாகப் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ‘ஏழு அதிசயங்’களில் ஒன்றாகக் இது கருதப்படுகிறது.
கஜுராஹோ என்ற பெயர், பழங்காலத்தில் ‘கர்ஜுராவாஹகா’ என்று அழைக்கப்பட்டது. இது சமஸ்கிருதச் சொல்லான கர்ஜூர் என்ற சொல்லில் இருந்து வந்தது. சமஸ்கிருதத்தில் கர்ஜூ்ர் என்றால் பேரீச்சம்பழம் என்று அர்த்தம்.

1 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு