08 September 2008

கொலை வாளினை எடடா!

Posted by Gunalan Lavanyan 9:38 AM, under | 3 comments

வலியோர் சிலர் எளியோர் தமைவதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்நிலையாம் எனும் நினைவா?
உலகாள உமது தாய் மிகஉயிர்வாதை அடைகிறாள்;
உதவாது இனி ஒரு தாமதம்உடனே விழி தமிழா!

கலையே வளர்! தொழில் மேவிடு!
கவிதை புனை தமிழா!
கடலே நிகர் படை சேர்;
கடுவிட நேர் கருவிகள் சேர்!
நிலமே உழு! நவதானியநிறையூதியம் அடைவாய்;
நிதி நூல்விளை! உயிர் நூல் உரை நிச நூல் மிக வரைவாய்!

அலை மாகடல் நிலம் வானிலுன் அணிமாளிகை ரதமே அவை ஏறிடும் விதமே
உனததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே
குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!

தலையாகிய அறமே புரி சரி நீதி பொருள் ஜனநாயகம்
எனவே முரசறைவாய்! இலையே உனவிலையே
கதிஇலையே எனும் எளிமை இனி மேலிலை
எனவே முரசறைவாய்... முரசறைவாய்!

- புரட்சிக்கவி பாரதிதாசன்

3 comments:

தலை யாகிய அறமே புரி, சரி நீதி உதவுவாய்!
சமமே பொருள் ஜனநாயகம் எனவே முரச றைவாய்!
இலையே உனவிலையே கதிஇலையே எனும் எளிமை
இனி மேலிலை எனவே முரசறைவாய்... முரசறைவாய்!

கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே
குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!

வலியோர் சிலர் எளியோர் தமை வதயே புரி எமதா, மகராசர்கள் உலகாளுதல் நிலையா எனும் நினைவாக!!

Post a Comment