09 February 2010

குடை பிடித்து நடக்கும் காதல்

Posted by Gunalan Lavanyan 10:32 PM, under | No comments

குடையில்
மஞ்சள் கதிர்களை சுமந்து
நடப்பவளை தொடர்கிறேன்...
நேற்றொருநாள் நிகழாத
சந்திப்பையெண்ணி
பின்திரும்பி விழிகளால்
நலம் பகர்கிறாள்...
நான் இமைகளால்
வழிமொழிகிறேன்...
நடையின் வேகம் குறைத்து
நடக்கிறாள்...
நடக்கிறோம்..!
குடை பிடித்து நடக்கிறது
காதல்!

- சா.இலாகுபாரதி

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு