கிருஷ்ணவேணி பஞ்சாலை
80களில் இருந்த பஞ்சாலை மில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இந்தப் படத்தை தனபால் பத்மநாபன் இயக்கியிருக்கிறார்
கிருஷ்ணவேணி பஞ்சாலை
வைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் இணைந்திருக்கும் இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்.
கிருஷ்ணவேணி பஞ்சாலை
ஆஹா படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜீவ் கிருஷ்ணா இந்தப் படத்தில் பஞ்சாலை முதலாளி பாத்திரத்தில் பந்தாகாட்டுகிறார்
07 December 2011
மதுர கீதமான கீதம் மதுரம்
Posted by lavanyan gunalan
3:10 pm, under | No comments
காற்றோடு கலந்துவரும் பனி மாதிரி இசையோடு கலந்துவிட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்களுக்காகவே ஒரு இசை உற்சவம் நடந்தால் எப்படி இருக்கும்?! ராக சஞ்சாரத்தில் அந்த அரங்கமே லயித்து பிரமித்துப்போய்விடும் இல்லையா?! அப்படியொரு இசை நிகழ்ச்சியை ‘கீதம் மதுரம்’ என்ற பெயரில் ‘உத்சவ் மியூஸிக்’ அமைப்பு சென்னை பாரதிய வித்யாபவனில் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸோடு இணைந்து நடத்தியது. நவம்பர் 17 மாலை 6.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி ரெண்டு மணிநேரம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தது. மார்கழி இசைத் திருவிழா களைகட்டுவதற்கு முன்பாகவே முழுக்க முழக்க 5 பெண் பாடகிகள், 4 பெண் வாத்தியக்காரர்களே நடத்திய இந்தக் கச்சேரியில் அன்&ப்ளக்டு பாடல்களாக பல்லவி ஒரு சரணம் என்று ஒரு பாட்டுக்கும் இன்னொரு பாட்டும் பாலம் கட்டினார்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் அவ்வளவு அப்ளாஸ். இசை ஞானமே இல்லாதவர்களுக்குக்கூட எம்.எஸ்.ஸின் பாடல்களைக் கேட்டால் இசையார்வம் பிறந்துவிடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி பெரிய உதாரணம்.
31 August 2011
ரஜினிக்கு பாட்ஷா: அஜீத்துக்கு மங்காத்தா
Posted by lavanyan gunalan
11:39 pm, under கேலரி | No comments
15 August 2011
இலங்கையின் முக்கியமான ஆவணங்கள்: ஆர்.ஆர்.சீனிவாசன்
Posted by lavanyan gunalan
7:21 am, under history | No comments
மைல்கல்: 4
தெரு புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன்: 1
"மனிதர்களின் உணர்ச்சிகளை
அப்படியே படப்பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு லைட்டிங் மற்றும்
போட்டோகிராஃபிக்கு உரிய
மற்ற விதிகள் தேவையற்றவை.'
- பிரிசோன்
ஆர்.ஆர்.சீனிவாசன்... தெரு புகைப்படக் கலைஞர் (Street Photographer). இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான புகைப்படக் காட்சிகளை பதிவு செய்திருக்கிறார். 'காஞ்சனை திரைப்பட இயக்கம்' ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில் 17 அப்பாவி தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவராக வலம் வரும் இவர், தனது பயணத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறார்...
![]() |
| படப் பிடிப்பில் சீனிவாசன் |
11 August 2011
கொட்டிக்கொடுக்கும் அழகுக் கலை
Posted by lavanyan gunalan
10:13 pm, under history | No comments
மைல்கல்: 3
அழகுக் கலை நிபுணர் வசுந்தரா: 2
தொடர்ச்சி...
மீண்டும் அழகு சம்பந்தமா படிக்கத் தொடங்கினேன். நிறைய சர்டிஃபிகேட் கோர்ஸ் படிச்சேன். ஒவ்வொரு இடத்தில் படிக்கும்போதும் நிறைய ஐடியா வந்தது. லண்டனுக்குப் போய் 'அட்வான்ஸ்ட் சி அண்ட் ஜி பியூட்டி தெரபி - ஹேர் டிரஸ்சிங்' பி.ஜி. டிப்ளமா படித்தேன். சென்னையில் இருந்து ஐந்து பேர் போயிருந்தோம். பிராக்டிக்கல், தியரி எல்லாம் முடிந்தது. பரீட்சை எழுதினேன். சர்டிஃபிகேட் வாங்கினேன். லண்டன் போய் வந்ததில் இன்னும் கிளாரிட்டி கிடைத்தது. இப்போ அதே கோர்ஸ் எங்க அகாடமியில் பாடமாக இருக்கிறது. நான் என்ன படித்தேனோ, அதையே என் மாணவர்களும் படிக்கிறார்கள். இங்கிலாந்து பயணத்துக்குப் பிறகு சிங்கப்பூர், தாய்லாந்து, பிரேசில் என என் பயணங்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.இப்படி உலகெங்கும் அழகுக் கலை சம்பந்தமாகவும் அழகுபடுத்துவது சம்பந்தமாகவும் என்னவெல்லாம் படிப்பு இருக்கிறது; என்னவெல்லாம் பயிற்சிகள் அளிக்கப்படுக்கின்றன என்று தாகமெடுத்து தேடினேன்; தேடிக்கொண்டே இருக்கிறேன்.
கத்தரிக்கோலும் சீப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் 'ஹேர் கட்டிங்' செய்யமுடியும் என்று இங்கு நினைக்கிறார்கள். அதிலும் தொழில்நுட்பம் இருக்கிறது; அறிவியல் இருக்கிறது; புதிய உத்திகள் தேவை இருக்கிறது. அதையெல்லாம் படிக்க வேண்டும்; பயிற்சி எடுக்க வேண்டும் என்ற தாகம் தனியாமல் இருக்க வேண்டும். அந்த தாகம் இப்போதுகூட என்னிடம் அப்படியே இருக்கிறது.
நான் என்ன கற்றுக்கொள்கிறேனோ, அதையெல்லாம் என் மாணவர்களுக்கும் கற்பிக்கிறேன். இப்படி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என்று நிறைய செமினார் வகுப்புகள் நடத்தியதில் நல்ல வரவேற்பு. இலங்கையில் சற்று அதிகம். அங்குதான் ஒரே நேரத்தில் 600 பேர் செமினார் பயிற்சி வகுப்பில் பங்கு எடுத்துக்கொண்டார்கள். அதேவேளையில் வெளிநாட்டுக்காரர்கள் இந்தியா வந்து கற்றுக்கொள்வதில் நிறைய ஆர்வம் காட்டுவதை அந்த செமினார் வகுப்புகளில் என்னால் பார்க்க முடிந்தது.
அழகுக் கலைக்கு வெளிநாடுகளில் இல்லாத பாடத்திட்டங்கள், பயிற்சி முறைகள் அப்படி என்ன இந்தியாவில் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம், இருக்கிறது. இந்தியாவில் மூலிகை இருக்கிறது. வெளிநாடுகளில் கெமிக்கல்களில் இருந்துதான் அழகு சாதனப் பொருட்கள் தயாராகின்றன. ஆனால், மூலிகையிலிருந்து நிறைய அழகு சாதனப் பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி அழகு படுத்துவதால், அழகுபடுத்திக்கொள்வதால் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மேலும், நிறைய நன்மைகள்தான் கிடைக்கின்றன.
இந்தத் துறையில் ஆர்வத்துடன் சேர்ந்து கற்கும் மாணவர்கள் பொருளாதார சுதந்திரத்தோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் வேலையில் முழு திருப்தியும் இருக்கிறது. குறிப்பாக, நிறைய பெண்களுடைய வாழ்க்கையை சாதகமான சூழலுக்கு மாற்றக்கூடிய வல்லமை இந்தத் துறைக்கு உண்டு. இதில், எனக்கு நேரடி அனுபவம் நிறைய இருக்கிறது.
அட்வான்ஸ்டான 'மேக்கப்' எல்லாம் இப்பதான் வந்தது. அந்தக் காலத்தில் மருதாணியைத்தான் லிப்ஸ்டிக்காக உபயோகித்தார்கள். அதேமாதிரி அவுரி விதையை அரைத்து அதிலிருந்து வருகிற கலரை ஹேர் கலராக பூசினார்கள். குங்குமப் பூவை அரைத்து உடல் முழுக்கத் தடவினார்கள். அதிலிருந்து வெளிப்படும் நிறங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்காதவை. ஆனால், நீண்ட நாளைக்கு நீடிக்காது. குளிக்கக் குளிக்க காணாமல் போய்விடும்.
எந்த மேக்கப் போட்டாலும் அதற்கான தேவை முடிந்ததும் அதைக் கலைத்துவிடணும். குறைந்தபட்சம் தூங்கப்போகிற நேரத்திலாவது முகத்தை கழுவிட்டுவிட்டு படுக்கணும். இல்லாமல்போனால் பக்கவிளைவுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாளாக நாளாக மேக்கப் ரத்தத்தில் கலக்கும்.
மேக்கப் போடும்போது நல்ல பிராண்ட்டட் அயிட்டமா யூஸ் பண்ணி மேக்கப் போடணும். விலை கம்மியாக கிடைக்கிறது; ரொம்ப சீப்பா பிளாட்பாரத்தில் வாங்கிடலாம் என்று நினைத்து தப்பு கணக்குப் போடக்கூடாது. அப்புறம் இன்னும் அதிக பணத்தை செலவழிக்க வேண்டிய நிலை ஆகிடும். இதெல்லாம், அழகுக் கலையில் அடிப்படையில் விஷயங்களுள்.
மத்திய தொழில் துறை அமைச்சகத்துக்காக அழகு சம்பந்தப்பட்ட 9 புத்தகங்களை தயாரித்து இருக்கிறேன். ஒவ்வொரு புத்தகத்திலேயும் அழகு தொடர்பான ஒவ்வொரு சிகிச்சை முறைகளைப் பற்றி சொல்லியிருக்கோம். ஹேர் கலரிங், ஹேர் கட்டிங், ஸ்பா, அரோமா இப்படி எல்லாமே இருக்கு. நல்லாவும் இருக்கு. அரசு இதை அங்கீகரித்து இருப்பதில் மகிழ்ச்சி.
அழகுக் கலைப் பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் இதற்குரிய பாடங்களைப் படிப்பதோடு, வாடிக்கையாளர்களிடம் எப்படி பேசவேண்டும்; எப்படி பழக வேண்டும் என்பது பற்றியெல்லாம் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். எல்லா மொழி வாடிக்கையாளர்களிடமும் சுலபமாகத் தொடர்புகொள்ள வேண்டும். அதற்கு, ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் படிக்கும்போதெல்லாம் இந்த அளவுக்கு ஆலோசனை கொடுப்பதற்கு ஆட்கள் இல்லை. இப்போது நிறைய வசதி - வாய்ப்புகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த வகை பாடத்திட்டங்களில் ஒரு பிரிவாக, 'கலர் காமினி' என்று ஒரு கோர்ஸ். அதில் உயரம் குறைந்தவர்களுக்கு எந்தக் கலர், உயரமானவர்களுக்கு எந்தக் கலர் செட்டாகும்; கல்யாணப் பெண்ணுக்கு எந்த மாதிரி மேக்கப் போடணும், எந்த டிரஸ் போட்டா மேட்சாகும். வெயில் காலம், மழைக் காலம், குளிர்காலம்... இப்படி எந்தெந்தக் காலங்களில் எந்த மாதிரியான கலர் டிரஸ் போடணும். கூல் கலர்ஸ்னா என்ன..? வார்ம் கலர்ஸ்னா என்ன..? என்பதையெல்லாம் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.
அதேமாதிரி மேக்கப்பில் நிறைய வெரைட்டி இருக்கு. டே மேக்கப், ஈவினிங் மேக்கப், சினிமா மேக்கப், போட்டோகிராஃபி மேக்கப். இந்த மேக்கப்பிலே எல்லா ஷேப்பும் இருக்கு. ஆனால், ஓவல் ஷேப்தான் பெஸ்ட். டைமண்ட் ஷேப்பைக்கூட ஓவலா மாற்றமுடியும். இப்படி மேக்கப்லேயே நிறைய டைப்ஸ். ஆயில் மேக்கப் எப்படி பண்ணணும்; மேட் பினிஷிங், ஹை டெஃபினிஷியன் மேக்கப், கேமரா மேக்கப், லைட் மேக்கப் (வெயிட்டே இல்லாம எப்படி மேக்கப் பண்றது) எப்படி பண்ணணும்... இப்படி எல்லா வகையான மேக்கப்பையும் கற்றுகொள்ளும் வாய்ப்பு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிகமாகவே இருக்கின்றன.
அதேபோல், வேலை உத்தரவாதமும் உண்டு. எளிதில் தனியாக தொழில் தொடங்கி வெற்றி பெறவும் முடியும். இந்தத் துறையில் இவ்வளவுதான் படிப்புன்னு சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் நிறைய விஷயங்கள் வந்துகிட்டே இருக்கு. நம்மை நாமே அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும்.
இந்தக்காலத்தில் ஸ்கின் அண்ட் ஹேர் பிராப்ளம் அதிகமாக இருக்கிறது. வெயிலில் போகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் பயணிக்கிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அதனால், எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக அணுகவேண்டிய தேவை அதிகமாகிவிட்டது. அதேநேரத்தில் பொருட்களும் இயந்திரங்களும் முன்னேற்றம் அடைந்துகொண்டே இருக்கு. அதனால், பியூட்டிஷியன் எப்போதும் அப்டேட்டடாக இருக்க வேண்டும்.இந்தத் துறைக்கு வருகிறவர்கள், சும்மா யாரிடமாவது கற்றுக்கொண்டோமா கடையை விரித்தோமா என்று இல்லாமல், அரசு சான்றிதழ் பெற்ற அகாடெமியில் சேர்ந்து, கோர்ஸை நன்கு படித்துவிட்டு ஆரம்பிப்பதுதான் நல்லது. அப்போதுதான் இந்தத் துறையில் அப்கிரேட் ஆகமுடியும். இதில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் நீங்களும் அழகுக் கலை நிபுணராக வலம் வரலாம்."
கொட்டிக்கொடுக்கும் அழகுக் கலை என்பதில் சந்தேகம் இல்லை!
வசுந்தராவின் வலைதளம்
- சா.இலாகுபாரதி
அடுத்த மைல்கல் புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன்
10 August 2011
அழகுக் கலை
Posted by lavanyan gunalan
11:05 pm, under history | No comments
அழகுக் கலை நிபுணர் வசுந்தரா: 1
முகம் மிருதுவாகவும் பொலிவுடனும் இருக்க, ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால், பச்சைப் பயிறு மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளப்பாகும்.
- அழகுக் குறிப்பு
வசுந்தரா. அழகுக் கலை நிபுணர். மூலிகைப் பொருட்களின் மூலம் அழகு சிகிச்சை அளிப்பதில் கைத்தேர்ந்தவர். சன் டி.வி.யின் 'மலரும் மொட்டும்', 'அழகுக் குறிப்புகள்' நிகழ்ச்சிகளின் மூலம் வெகுவாக அறியப்பட்டவர். அழகுக் கலையின் நுணுக்கங்களை பல்வேறு நாடுகளுக்கும் சென்று அறிந்து வருவதில் ஆர்வம் உடையவர். ஒருபுறம் பியூட்டி கிளினிக்கை நடத்திக் கொண்டு, மறுபுறம் தனது அகாடெமி மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்களை அழகுக் கலை நிபுணர்களாக உருவாக்கி வருவது அழகுக் கலைத் துறையில் ஒரு மைல்கல். இதோ தனது அனுபவங்கள் மூலமாக அழகுக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டுகிறார் வசுந்தரா...07 August 2011
நல்ல சமையல்காரனாக என்ன செய்ய வேண்டும்? - கற்று தருகிறார் செஃப் ஜேக்கப்
Posted by lavanyan gunalan
6:18 pm, under history | No comments
மைல்கல்: 2
செஃப் ஜேக்கப்: 3
என்னோட தலைமையில நிறைய ரெஸ்டாரெண்ட்ஸுக்கு கிச்சன் கசல்டன்சி கொடுத்திட்டு இருக்கேன். என்ன மெனு போடலாம்... எந்தமாதிரி ரெசிபீஸ் பண்ணலாம்னு கசல்டேஷன் கொடுக்குறோம். கிருஷ்ணா ஸ்வீட்ஸோட ரசம் ரெஸ்டாரன்ட் சென்னையில மொத்தம் மூணு இருக்கு. நான் பண்ண கொங்கு நாட்டு ஆராய்ச்சியைதான் 'ரசம்'ங்கிற பேர்லேயே கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இயக்குநர் முரளி ரெஸ்டாரெண்டா கொண்டுவந்தார். இதுக்கு அசாதாரணமான துணிச்சல் வேணும். ஊரே இட்லி, தோசைன்னு சுத்திட்டு இருக்கும்போது 'ரசம்'னு பேர் வெச்சி அதை வெற்றியடைய வைக்கிறதுங்கிறது சாதாரண காரியம் இல்லை. இது அவர் பண்றதுக்குக் காரணம், மைசூர்பாவையே மாத்தியமைச்ச பரம்பரை இல்லையா அவர்..? அந்தப் பாரம்பரியம் உள்ளவர் இதைப் பண்றது பொருத்தமான விஷயமாகவும் இருக்கு.
![]() |
| கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளியுடன்... |
04 August 2011
சங்க கால சமையல்: செஃப் ஜேக்கப்
Posted by lavanyan gunalan
10:08 pm, under history | No comments
மைல்கல்: 2
செஃப் ஜேக்கப்: 2
தொடர்ச்சி...
இருபது வருஷத்துக்கு முன்னாடிதான் செட்டிநாட்டு சமையலை ஊக்கப்படுத்தினாங்க. இன்னைக்கு 3 நட்சத்திர ஹோட்டலில் இருந்து 5 நட்சத்திர ஹோட்டல்கள் வரைக்கும் செட்டிநாட்டு சமையல் வந்திருக்கு. லண்டனில் இரண்டாவது இடத்தில் செட்டிநாட்டு சமையல் இருக்கு. அதேமாதிரி தமிழ்நாட்டில் நிறைய சமையல் வெரைட்டி இருக்கு. ஒவ்வொரு கம்யூனிட்டிக்கும் ஒரு சமையல் இருக்கு. செட்டியார்களுக்கு மட்டும்தான் கம்யூனிட்டி சமையல் இல்லை. செட்டிநாட்டு சமையலும் அவங்களுக்கே உரிய சமையல் இல்லை. செட்டியார்கள் நல்லா சாப்பிடக்கூடியவங்க. சமையலில் நிறைய வெரைட்டியை எதிர்பார்ப்பாங்க. நிறைய வேலைப்பாடுகள் இருக்கணும்னு நினைப்பாங்க. அதனால்தான், செட்டிநாட்டு சமையலில் கோலா உருண்டை, பனியாரம், ஆப்பம், இடியாப்பாம்னு நிறைய அயிட்டங்கள் இருக்கு. அவங்களுக்கு ஒரேமாதிரி சாப்பிடுவது பிடிக்காது. செட்டிநாட்டு சமையல் பிரபலம் ஆனதற்கு இப்படி ஏகப்பட்ட வெரைட்டிகள் இருந்ததும் ஒரு காரணம். இதேமாதிரி நிறைய கம்யூனிட்டியோட சமையல் தமிழ்நாட்டில் இருக்கு. அதை யாருமே கண்டுக்கிறதாகவே இல்லை. எத்தனை நாளைக்குத்தான் 'செட்டிநாடு... செட்டிநாடு...'ன்னு சொல்லிட்டு இருக்கப்போறோம்..?







