13 February 2010

சல்லாப காதலர்கள் ஜாக்கிரதை!

Posted by Gunalan Lavanyan 6:57 PM, under | No comments

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக நிறைய காதல் ஜோடிகள் முன்கூட்டியே காண்டம்களை வாங்கிவருவதாகவும், அதனால் காதலர் தின ஸ்பெஷல் விற்பனையாகவே உலகமெங்கும் மில்லியன் கணக்கில் காண்டம்கள் விற்பனை ஆகி இருப்பதாகவும் கூறுகிறார்கள்.


காதலர் தினம் என்ற பெயரில் இப்படி சல்லாபமாக இருக்க விரும்பும் காதல் ஜோடிகளை எச்சரிப்பதற்காகவே இந்தக் கட்டுரை. தவிர காதலர்களுக்கோ அல்லது காதலர் தினத்தை சல்லாபமாக கழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கும் காதல் ஜோடிகளுக்கோ எதிரான கட்டுரை அல்ல.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக காம லீலைகளில் ஈடுபடும் காதல் (காம) ஜோடிகளில் சிலர் அந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக எண்ணி காம விளையாட்டில் ஈடுபடும்போது அதை செல்போனில் படம் பிடித்து விடுகிறார்கள். தெரிந்தோ, தெரியாமலோ இப்படி செய்பவர்கள் அவசியம் இத்தகைய வீடியோ பதிவுகளை தவிர்ப்பதுதான் உத்தமம். காரணம், செல்போனில் பதிவு செய்து அதை அல்பத்தனமாக பிறகு பார்த்து ரசிக்கலாம் என்று கருதியிருப்பார்கள். ஆனால், அந்த அல்பத்தனமே அதன்பிறகு அவர்களுக்கு ஆப்புவைக்கும்.

அது எப்படி என்று பார்ப்போம்?
பல ஆண்கள் (சில பெண்கள்), இந்த வீடியோ பதிவை தங்களுடைய நண்பர்களுக்கு போட்டு காட்டியும், புளூ டூத் வழியாக ஃபார்வர்ட் செய்தும் சில்லறைத்தனமான ஆசையை நிறைவேற்றப்பார்ப்பார்கள். ஆனால், அவர்களுடைய அந்த நண்பர்கள் மூலமாக எளிதாக மற்ற எல்லாருடைய செல்போன்களுக்கும் இந்த வீடியோ காட்சி பரவி பிரசித்தி பெற்ற வீடியோவாக மாறி, வீடியோவில் உள்ளவர்களின் பிற்கால வாழ்க்கையையே அது கேள்விக்குறியாக மாற்றிவிடுகிற வாய்ப்புகளை இதே தொழில்நுட்ப வளர்ச்சிதான் செய்து தருகிறது.

அப்படியில்லாமல், சிலர் தாங்கள் மட்டுமே வைத்து வீடியோவை பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தாலும் சில நேரங்களில் அசம்பாவிதம் நடந்துவிடுகிறது. திடீரென்று ஒருநாள் சொல்போன் ரிப்பேர் ஆகி சர்வீஸுக்கு போனால் அதில் இருக்கும் வீடியோவை சர்வீஸ் சென்டர்காரர்கள் சுட்டு உலகம் முழுக்க இணையதளத்தின் மூலமோ அல்லது அதே புளூ டூத் மூலமோ பரப்பிவிடும் சாத்தியங்கள் நிரம்ப இருக்கின்றன.

இப்படி பதிவு செய்யும் வீடியோவை மற்றவர்கள் பார்ப்பது மட்டும் இல்லாமல், சில மாஃபியா கும்பல்கள், குறுக்குசால் ஓட்டுபவர்களிடம் அது கிடைத்துவிட்டால் அந்தப் பதிவில் உள்ளவர்களின் கதி அதோ கதிதான். அதை வைத்தே அந்த கும்பல் அவர்களை ப்ளாக்மெயில் செய்து பணம் பறிக்கவும், தவறான வழிகளுக்கு அழைக்கவும் சந்தர்ப்பங்கள் இடம் கொடுக்கும்.

சில நேரங்களில் அந்த வீடியோ மீடியாகாரர்களின் கைகளில் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான்... அதில் உள்ளவரின் மானம் கப்பலேரி ஊர் சுற்றி உலகம் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும்.

இதனால் சம்பந்தப்பட்டவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. ஆகவே, உல்லாசமாக ஈடுபடுபவர்கள் சல்லாபத்தை முடித்தோமா பாய் மடித்தோமா என்று இருப்பது நல்லது. தவறியும், 'நான் மட்டும்தானே பார்க்கப்போகிறேன். நாம் மட்டும் தானே பார்க்கப்போகிறோம்... இன்று இரவு பார்த்துவிட்டு நாளை டெலிட் செய்துவிடுகிறேன்' என்று எதிர் பாலினக்காரர் சொல்கிறார் என்று அதை நம்பி, சம்மதம் சொல்லி, வீடியோ பதிவு செய்ய அனுமதிக்காதீர்கள். அது உங்கள் வாழ்க்கையையே நிர்மூலமாக்கிவிடும்.

தேவை ஜாக்கிரதை!
தேவையா இப்படிப்பட்ட சல்லாபம்?

உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்... இந்தப் பதிவுக்கு வாக்களித்து, சல்லாப வீடியோ பதிவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்.

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு