04 February 2010

வெட்கப்படும் தேவதைகள்!

Posted by Gunalan Lavanyan 12:12 AM, under | No comments

காதல் கொண்டாட்டம்
சா.இலாகுபாரதியின் கவிதை - 4





வானத்திலிருந்து இறங்கி
முதன்முறையாக பூமிக்கு வந்த தேவதைகள்
நகர்வலம் வரத்தொடங்கியிருந்தனர்...

அது ஒரு இலையுதிர்க்காலம்.
தெருக்களின் இருமறுங்கிலும்
ஆடைகளைக் களைந்து
நின்றுகொண்டிருந்தன மரங்கள்.

தேவதைகள் வருவதை அறிந்து
நாணத்தால் இளம் பச்சை நிற ஆடைகளை
பூணத் தொடங்கியிருந்தன சில மரங்கள்.

வெட்கத்தை இழந்த மரங்கள்
‘நிர்வாணம்தான் யாராலும் பறிக்கமுடியாத
ஆடை’ என்று தத்துவம் பேசின.

நிர்வாணம் பார்த்து கண்கள் பூத்துவிட்ட
தேவதைகளுக்கு வெட்கத்தைப் பார்க்க
புதிதாக இருந்தது.

வெட்கம் குறித்து
யோசிக்கத் தொடங்கிய தருணத்தில்
ஆடை தறித்த மரங்கள்
பூக்கத் தொடங்கியிருந்தன.
தேவதைகள் வெட்கப்படத் தொடங்கியிருந்தனர்.

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு