11 February 2010

காதலை தீர்த்துக்கொள்வோம்!

Posted by Gunalan Lavanyan 11:15 PM, under | No comments

உனக்காக எதையும் செய்வேன்
என்று பொய்சொல்லப் போவதில்லை
நான் எதையெல்லாம் செய்கிறேனோ
அதையெல்லாம் உனக்காகவே செய்வேன்!

பிறைமுகம்
கயல்விழி
சங்கு கழுத்து
மேகக் கூந்தல்
மலை மார்பு
கொடியிடை
வாழை கால்கள்
தாமரை பாதம் என்று
அவளை வர்ணிக்கமாட்டேன்!
இதயத்தில் புகுந்து
எப்போதும் என்னை
இம்சித்துக்கொண்டிருக்கும்
அவள் ஒரு பிடாரிகளின் அரசி!

குடை இல்லாமல் போகும் போது
மழை வருவதைப் போல
நீ இல்லாமல் போகும்போது
அதிகமாகக் காதல் வருகிறது எனக்கு!

இதயத்தில்
பூக்கள் பூப்பதில்லை
பொழிகின்றன
காதல் மழை!

வாழையடி வாழையாக
உன்னை காதலித்துக்கொண்டிருக்கிறேன்
இந்தத் தலைமுறையிலாவது வா
காமம் செப்பி
காதலை தீர்த்துக்கொள்வோம்..!

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு