02 February 2010

கண்களுக்குள் புகுந்து விளையாடும் தேவதை...

Posted by Gunalan Lavanyan 12:54 AM, under | 1 comment

காதல் கொண்டாட்டம்
சா.இலாகுபாரதி கவிதை - 2


கண்களுக்குள் புகுந்து
விளையாடியபடி இருக்கிறாள்
தேவதை
இதய வனத்தின்
நிச்சலனத்தைக் கலைத்து...

காட்டின் அடர்ந்த பரப்பில்
காட்சிகளை மாறிமாறி
அரங்கேற்றுகிறாள்
பற்பல ரூபங்களில்...

ஒவ்வொரு காட்சியிலும்
மகிழ்ச்சிக் குளத்தில் நீந்த
பழகுவிக்கும் என்னை,
பூக்களின் தென்றலின்
ஆரவார ஜதிகளுக்கிடையில்
முத்தமிட்டு முத்தமிட்டு
சொல்கிறாள்...
‘நான்
அவள் வசீகரன்’ என்று...

1 comments:

love poem puryira alavukku mandila masala illanga..

Post a Comment

கோப்பு

கோப்பு