திரைப்பட பாடலாசிரியர் பா விஜயின் ஸ்டைலில் அடுத்து கதாநாயகனாக அறிமுகமாகும் சினிமா கவிஞர் சினேகன். ஏற்கெனவே அமீர் படத்தில் கேரக்டர் ரோலில் நடித்து, டான்ஸ், காமெடி என கலக்கிய சினேகன் இப்போது உயர்திரு 420ஆக அவதாரம் எடுத்து நிற்கிறார். நயன்தாராவின் ஜெராக்ஸ் காப்பி என்று சொல்லப்படும் கர்நாடகப் பைங்கிளி மேக்னா ராஜ்தான் படத்தின் கதாநாயகி.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரேம்நாத் உயர்திரு 420இன் இயக்குனராக பரிணமித்து இருக்கிறார். ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சகமான படமாக உயர்திரு 420 உருவாகி வருவதாகக் கூறுகிறார்கள்.
படத்தின் சில காட்சிகள்...
0 comments:
Post a Comment