
புட்டபர்த்தி சாய்பாபாவிற்கு மார்ச் மாதம் 28-ம் தேதி நுரையீரல் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இப்போது வெண்டிலேட்டரில் சுவாசிக்கும் பாபாவின் உடல்நிலை கவலை அளிப்பதாக இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் மைய இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பாபாவின் முக்கிய உடல் உறுப்புகள் சிகிச்சைகளை ஏற்கும் நிலையில் இல்லை. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. பாபாவுக்கு 85 வயதாகிறது.
0 comments:
Post a Comment