05 April 2011

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுகிறாரா?!

Posted by Gunalan Lavanyan 8:53 AM, under | 1 comment

உலகக் கோப்ப போட்டிகள் முடிந்ததும் கிரிக்கெட் விளையாட்டிலிருந்தே சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறப்போவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், தற்போது சச்சின் வெளியிட்டிருக்கும் செய்தியே வேறாக இருக்கிறது.

sachin tendulkar


நடந்து முடிந்த உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா கோப்பையை கைப் பற்றியதையடுத்து சச்சின் மிகவும் சந்தோஷத்தில் திளைத்து வருகிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேறியிருக்கும் இந்தக் கனவை முழுமையாக அனுபவிக்கப் போவதாக அவர் கூறியிருக்கிறார். அதனால் இப்போது ஓய்வு பெறுவதைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லை என்றும் சச்சின் கூறியிருக் கிறார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் களிடம் சச்சின் பேசியது வருமாறு:

”தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் என் மனதில் இல்லை. ஓய்வு பெற விரும்பினால், அப்போது வெளிப்படையாக அறிவிப்பேன். இப்போதைக்கு என் கவனம் முழுவதும் உலகக் கோப்பை கொண்டாட்டத்தின் மீது உள்ளது. விரைவில் அடுத்து நடக்கவுள்ள தொடர்களுக்கு தயாராக வேண்டும்.” என்று சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.

சச்சின் எங்கே ரிடயர்ட் ஆகிவிடுவாரோ என்று வருத்தத்தில் ஆழ்ந்திருந்த அவரது ரசிகர்களுக்கு, சச்சின் சொல்லியிருக்கும் வார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

1 comments:

sachin kandipaga vilaiyada vendum.

Post a Comment

கோப்பு

கோப்பு