02 March 2010

சுவாமி நித்யானந்தாவின் காமக் களியாட்டம்!

Posted by Gunalan Lavanyan 9:47 PM, under | No comments

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பக்தகோடிகளுக்கு அருளாசி வழங்கி வந்த சுவாமி நித்யானந்தாவின் காமக் களியாட்டைத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது சன் நியூஸ் தொலைக்காட்சி. குருக்கள், குருஜிக்கள் வரிசையில் மற்றொரு நபராக சேர்ந்திருக்கிறார் இந்த செக்ஸ் ஆசை ‘சாமி’யார்?

செவ்வாய் (02.03.2010) அன்று இரவு 9 மணி அளவில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நேரடிக் காட்சிகள் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. தமிழ்த்திரைப்பட நடிகை, R என்ற முதல் எழுத்தை பெயராகக் கொண்ட ஒரு நடிகையுடன் நித்யானந்தா சல்லாபித்துக்கொண்டு இருந்தார் அந்தக் காட்சியில். (சுவாமியின் லீலையை பார்க்காதவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.... http://www.envazhi.com/?p=16649)

பெண்கள், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பார்க்கவே முடியாத அளவுக்கு அருவெறுப்பும் அபாசமும் நிறைந்த அந்தக் காட்சிகள் நித்யானந்தாவின் பக்தகோடிகளுக்கு ஒரு பேரதிர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இந்த வேடதாரியின் காம ரூபம், இந்த ஒரு நடிகையோடு மட்டும்தானா? இன்னும் எத்தனைப் பேரோ… எத்தனை பக்தைகளோ… ஆண்டவனுக்கே வெளிச்சம்!
பாவங்களைப் போக்குபவர்கள்… ஞானத்தையும் (அறிவையும்), அருளையும் வழங்குபவர்கள், துறவு பூண்டவர்கள் இப்படி துறவறத்தைத் துறந்து சல்லாபக் கோலம் பூணுவது என்ன முறையோ… நீங்களே பதில் சொல்லுங்கள்…

சாதாரண மனிதரைப் போன்ற ஆசையும் ஆசாபாசமும் இருப்பின் இந்தத் துறவுக்கோலமும் காவி வேஷமும் எதற்கு..?

இப்படி குருக்கள், குருஜிக்களின் குட்டும், காமக் கூத்தும் வெளிவந்துகொண்டே இருந்தாலும் அவர்களைத் தேடி போகிறவர்களின் (பக்தர்களின்) எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை. எப்போதுதான் திருந்தப்போகிறது இந்த மூடநம்பிக்கைச் சமூகம்…

0 comments:

Post a Comment