25 February 2011

பட்டுப்புடவை, மல்லிகை, பொன்நகை ப்ளஸ் புன்னகை

Posted by Gunalan Lavanyan 7:27 AM, under | No comments



ஐயய்யோ பிடிச்சிருக்குஎன்ற தன் பாட்டின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த மஹதி, சினிமா, கர்நாடக இசை மேடை ஆகிய இரண்டிலும் பிசியாக இருக்கிறார். சங்கீதக் குடும்பத்தைச் சேர்ந்த மஹதியை சந்தித்தபோது நல்ல மழை. மஹதி அகாடமி ஆஃப் மியூஸிக் அண்ட் டான்ஸ்பள்ளியில் நடந்தது இந்த மழை நாள் சந்திப்பு.


‘‘நாங்க இசைக் குடும்பம். அப்பா திருவையாறு சேகர். பாடகர்; இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் சிஷ்யர். அம்மா, புல்லாங்குழல் வித்வான் வசந்தி. புல்லாங்குழல் வித்வம்சினி திருமதி கேசியின் சிஷ்யை. அப்பா, அம்மா சேர்ந்துதான் இந்த அகாடமியை நடத்திட்டு இருக்காங்க. இது ஆரம்பிச்சு ஏழு வருஷம் ஆகுது. இங்கே, 600 ஸ்டூடன்ட்ஸுக்கு மேலே மியூஸிக் கத்துக்குறாங்க. பாட்டு, வீணைவயலின், கிடார், ஃப்ளூட், மிருதங்கம்னு எல்லாமே சொல்லித் தர்றாங்க. என் பெயர்லே அகாடமி நடக்கிறதாலே அப்பப்போ ஸ்கூல்லே என்ன நடக்குதுன்னு அம்மாகிட்டே தகவல் கேட்டுப்பேன். மத்தபடி எல்லாத்தையும் அப்பா அம்மாதான் கவனிச்சிக்கிறாங்க. நான் கச்சேரி, ரெக்கார்டிங்னு பிஸி ஷெட்யூல்லே இருப்பேன்.

இதோ வந்தேன்... வந்தேன்னு டிசம்பர் வந்துடுச்சு. மியூஸிக் ஃபெஸ்டிவெல் தொடங்கப்போகுது. அந்த மூடுலே இருக்கேன். அதே மூடுலே இருந்தாகணும். அப்பதான் எனக்கு ஃபெஸ்டிவெல் நல்லா போகும். என் கச்சேரிகள் நல்லா நடக்கணும்னா,  யூஸிக் தவிர, மத்த எல்லாத்தையும் நான் மறந்தாகணும். சில நேரங்கள்லே டிசம்பர் சீஸன்லே நிறைய ரெக்கார்டிங்கும் வந்துடும். அதுக்கும் போயாகணும். டைம் மேனேஜ்மென்ட் தெரிஞ்சிருக்கிறது இதையெல்லாம் சமாளிக்க ரொம்ப சௌகரியமா இருக்கு. அந்த மாதிரி சமயங்கள்லே அம்மா, அப்பாவைக்கூடக் கண்டுக்கமாட்டேன். ஆனா,  அவங்க எனக்கு உதவியா இருப்பாங்க. இப்ப கணவர் வ ந் து ட் டா ர் . அவ ரு ம் அப்பா, அம்மா மாதிரியே இருக்கார். வாழ்க்கை ரொம்ப ச ந் தோஷமா அமைஞ்சிருக்கு. கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.

ஒவ்வொரு வருஷமும் டிசம்பர் சீஸன்லே பதினஞ்சு கச்சேரியாவது பண்ணுவேன். போனவருஷம் பாடுன கீர்த்தனைகளை இந்த வருஷம் பாடமாட்டேன். சீஸன்லே ஒவ்வொரு கச்சேரிக்கும் வெவ்வேறு கீர்த்தனைகளை பி ரி ப் பே ர் ப ண் ணி வெச்சுக்குவேன். ராகத்துலே பு து சா கண்டு பி டி க் க எதுவும் இல்லே! அதனாலேஅபூர்வ ராகங்களாப் பார்த்து செலக்ட் பண்ணி வெச்சிருப்பேன். என்னோட கச்சேரியிலே எட்டு, ஒண்பது அயிட்டமாவது இருக்கும். இதையெல்லாம் ஒரு ரூலாவே கடைப்பிடிக்கிறேன். இந்த ரூல்ஸ்படிதான் இந்த சீஸனையும் தொடங்கப் போறேன். ஆனா, இந்த வருஷம் என்னோட ஒரு கச்சேரியிலே டபுள் ராகா - பல்லவி பாடுறதுக்கு ஸ்பெஷல் பிரிபரேஷன்ஸ் பண்ணி வெச்சிருக்கேன். அதேமாதிரி தமிழ்க் கீர்த்தனைகளையும் நிறைய பாடப்போறேன். அம்மாவும் நிறைய ஐடியாஸ் கொடுத்துருக்காங்க. அதையும் எப்படி பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

எப்பவும் சீஸன் ஆடியன்ஸ், எல்லா கச்சேரிக்கும் வருவாங்க. அதனாலே ஒவ்வொரு கச்சேரியும் வித்தியாசமாவும் புதுசாவும் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க. அதை நிறைவேத்துறது கச்சேரி செய்றவங்களோட கடமை. என் கடமையை நான் எப்பவும் சரியா செய்ய முயற்சி பண்றேன். அதுக்கு என்னோட ரோல் மாடலா இருக்கிற குரு, மதுரை டி.என். சேஷகோபாலன் அவர்களும் ஒரு காரணம். அதேமாதிரி கேரளாவில் இருக்கிற குரு, மங்காட்டு நடேசன் அவர்களும். இவங்க, என் இசைப் பயணத்துக்கு கிடைத்த நல்ல வழிகாட்டிகள்! (மஹதியின் முதல் குரு அவருடைய மாதாவும்
பிதாவும்தான்.)

சீஸன்லே மியூஸிக் பிரிபரேஷன் எப்படியோ, அப்படிதான் என் காஸ்ட்யூமும்! டிசம்பர்னா பட்டு நிச்சயம் உண்டு. மத்த சேலைகளுக்கு இப்ப வேலையே இல்லை. பட்டுப் புடவையோடு மல்லிகை, பொன்நகை ப்ளஸ் புன்னகை அவசியம்
இருக்கணும். இருக்கிற மாதிரி பார்த்துப்பேன். போன வருஷம் கட்டுன சேலையை இந்த வருஷம் கட்டமாட்டேன். இந்த வருஷம் கட்டுன சேலை அடுத்த வருஷம், நோ சான்ஸ். இதையெல்லாம் வியூவர்ஸ் (பெண்கள்) கண்கொட்டாமே கவனிக்கிறாங்க! அதனாலே சீஸனுக்கு பிரிப்பேர் ஆகும்போது சின்னச் சின்ன விஷயத்தைக்கூட பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியிருக்கு.

இன்னொரு முக்கியமான ச ங் கதி! ச ங் கீ த சீஸன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சாரீரத்தை கவனிச்சுக்கணும். என்னோடது சென்சிடிவான வாய்ஸ்ங்கிறதாலே யார் கிட்டேயும் அநாவசியமா பேசமாட்டேன். வாய்ஸ் ரெஸ்ட் கொடுப்பேன். போன்லேயும் அதிகமா பேசமாட்டேன். மேக்ஸிமம் எஸ்.எம்.எஸ்.தான்! அதே நேரத்துலே சரீரத்துக்கும் எதுவும் வந்துடக் கூடாது. அதனாலே ஹாட் வாட்டர்ட ய ட்னு இ ரு ப்பேன்.  சங்கீதத்துக்கு சாரீரமும் மு க் கி ய ம் , ச ரீ ர மு ம் முக்கியம்னு அப்பா சொல்லுவாங்க. அதை எப்பவும் ஃபாலோ பண்றேன். (தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!)

இப்ப இருக்கிறமாதிரி நான் பாட வரும்போது நிறைய வாய்ப்புகள் இல்லை. எங்காச்சும் ஒண்ணு, ரெண்டு வாய்ப்பு கிடைக்கும். ஏதாவது டி.வி. சானல்லே மியூசிக் புரோக்ராம் பண்ணுவாங்க. அந்த புரோக்ராம்லே கலந்துக்க ரொம்ப பிரயத்தனப்பட  வேண்டியிருக்கும். சில நேரங்கள்லே என்னதான் திறமை இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கும். ஆனா, இப்ப அப்படி இல்லே! (காலம் மாறிப்போச்சு!) திறமை வெளியே வர்றதுக்கு நிறைய வழி இருக்கு. ஒவ்வொரு சீஸனுக்கும் புதுசு புதுசா ஆர்டிஸ்ட் வர்றாங்க. பத்து, பன்னிரெண்டு வயசுலேயே ரொம்ப ஃபேமஸ் ஆயிடுறாங்க. விஜய் டி.வி. மாதிரி நிறை சானல்ஸ் அவங்களுக்கு ஏர் டெல் சூப்பர் சிங்கர்மாதிரி புரோக்ராம்லே வாய்ப்பு கொடுக்கறாங்க. அவங்களே வீடு தேடி வந்து அழைச்சிட்டு போறாங்க. கூடவே கிஃப்ட், சினிமா சான்ஸ்னு நிறைய கிடைக்குது.

இந்தமாதிரி நேரத்துலே இவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். ரொம்ப கடுமையா உழைக் கணும். வெற்றி கிடைச்சிடுச்சுங்கிறதாலே இதுவே முடிவுன்னு நினைச்சிடக்கூடாது. இதைவிட சாதிக்க இன்னும் நிறைய இருக்குங்கிற உண்மையை தெரிஞ்சுக்கணும். இந்த நேரத்துலே குருவோட வழிகாட்டுதல்படி நடக்குறது ரொம்ப முக்கியம்.

இன்னும் முக்கியமான விஷயம், கர்வம் வெச்சிக்கக் கூடாது. இதெல்லாம் என் அப்பா சொல்லிக் கொடுத்த பாடம். இதை என் ஜூனியர்ஸுக்கு சொல்றது என் கடமை. அதனாலே, கர்வம் வேணாம், புகழுக்கு மயங்கவேணாம், குரு பக்தி தேவை. இதெல்லாம் இருந்தா இன்னும் இன்னும் சாதிக்க முடியும். இசைச் சிகரத்தை அடையமுடியும்.’’
- சா.இலாகுபாரதி

நம் தோழி, டிசம்பர் 2010