கோப்பை நிறைய ஊற்றிப் பருகிய
தேனீரைப்போல்
வண்ணங்களைப் பார்க்கும்போதெல்லாம்
மனம் சப்புக்கொட்டி
சுவை கொள்கிறது.
மனதின் ஆழத்தில் ஊற்றாய்
மகிழ்ச்சி பிரவாகம் எடுக்கும்போதெல்லாம்
காட்சிக்கடலில்
வண்ணங்கள் பேரலையாய்
துள்ளி எழுகின்றன.
வாழ்க்கைப் பந்தயத்தில்
சக்கரங்களைப் பூட்டி
இளமைப் பெருவண்டியை ஓட்டுகிறபோது
வண்ணங்கள் குதிரைகளாய்
பாய்ந்தோடுகின்றன.
வண்ணங்களாலான வெளியின்
காதல் தோய்ந்த மனதில்
உயிர் அணுக்களாய்
பரிணமித்துக்கொண்டிருக்கின்றன
வண்ணங்கள் அனுதினமும்...
தேனீரைப்போல்
வண்ணங்களைப் பார்க்கும்போதெல்லாம்
மனம் சப்புக்கொட்டி
சுவை கொள்கிறது.
மனதின் ஆழத்தில் ஊற்றாய்
மகிழ்ச்சி பிரவாகம் எடுக்கும்போதெல்லாம்
காட்சிக்கடலில்
வண்ணங்கள் பேரலையாய்
துள்ளி எழுகின்றன.
வாழ்க்கைப் பந்தயத்தில்
சக்கரங்களைப் பூட்டி
இளமைப் பெருவண்டியை ஓட்டுகிறபோது
வண்ணங்கள் குதிரைகளாய்
பாய்ந்தோடுகின்றன.
வண்ணங்களாலான வெளியின்
காதல் தோய்ந்த மனதில்
உயிர் அணுக்களாய்
பரிணமித்துக்கொண்டிருக்கின்றன
வண்ணங்கள் அனுதினமும்...
0 comments:
Post a Comment