10 January 2010

சென்னை சங்கமம் கோலாகலத் தொடக்கம்

Posted by Gunalan Lavanyan 7:23 PM, under | No comments

கனிமொழி மற்றும் ஜெகத்கஸ்பார் இணைந்து நடத்தும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி 4வது ஆண்டாக சென்னையில் கோலாகலமாகத் தொடங்குகிறது. கடந்த ஆண்டு இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏராளமான மக்கள் ஆதரவு கிடைத்தது. லட்சக்கணக்கான மக்கள் இந்தக் கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தனர்.
அதேபோல இந்த ஆண்டும் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சென்னை சங்கம நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கனிமொழி கூறியிருக்கிறார்.
கிராமியக் கலைகள், நிகழ்த்துக் கலைகள் என்று காணாமல் போய்க்கொண்டிருக்கும் இந்தியக் கலைகளுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில் நடைபெறும் இந்த கலைநிகழ்ச்சியை இந்த ஆண்டும் மக்கள் அமோகமாக வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாம் ஆண்டு (2007) இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றபோது பல்வேறு எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் கனிமொழி சந்திக்க வேண்டியிருந்தது.
ஆனால், அந்த எல்லா சவால்களையும் சந்தித்த கவிஞர் கனிமொழி இப்போது 4வது ஆண்டை நோக்கி சங்கமம் நிகழ்ச்சியைக் கொண்டுவந்திருப்பதற்கு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம். மக்களுக்கு மகிழ்ச்சியையும் மக்கள் கலைகளுக்கு வளர்ச்சியையும் ஏற்படுத்துவதில் யார் முன்வந்தாலும் மக்கள் அதற்கு ஆதரவு அளிப்பார்கள் என்பதற்கு இந்த சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.
சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் ஜனவரி 11 முதல் 15 வரை ஐந்து நாட்கள் நடக்க இருக்கின்றன.
சங்கமம் நிகழ்ச்சி சென்னையில் மொத்தம் 17 இடங்களில் நடக்க இருக்கிறது.
நடக்கும் இடங்கள்:
1. எலியட்ஸ் கடற்கரை - பெசன்ட் நகர்
2. கண்டோன்மெந்த் பள்ளி வளாகம் - பல்லாவரம்
3. அண்ணா நகர் டவர் பூங்கா
4. கோடம்பாக்கம் மாநகராட்சி மைதானம்
5. திரு.வி.க. பூங்கா - பெரம்பூர்
6. லேடி வெலிங்டன் கல்லூரி அரங்கு - மெரீனா கடற்கரை
7. தீவுத் திடல் அரங்கு
8. நாகேஸ்வர ராவ் பூங்கா - மயிலாப்பூர்
9. சிவன் பூங்கா - கே.கே.நகர்
10. தந்தை பெரியார் அரங்கம் - வளசரவாக்கம்
11. அசோக் நகர் பூங்கா
12. அண்ணா பூங்கா, ராயபுரம்
13. சுதந்திர தின விழா பூங்கா - வள்ளுவர் கோட்டம்
14. திரு.வி.க.பூங்கா - ஷெனாய் நகர்
15. பாலவாக்கம் பல்கலைநகர்
16. நடேசன் பூங்கா - தி.நகர்
17.திருவொற்றியூர் பூங்கா - விம்கோநகர் கார்ப்பரேசன்
மற்றும்
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலிம்சேம்பரில் சென்னை சங்கமத்தின் ஓர் அங்கமான 'தமிழ்ச்சங்கமம்' நிகழ்ச்சியும் நடக்கிறது.
இங்கு முழுக்க முழுக்க எழுத்து எழுத்துசார்ந்த நிகழ்ச்சிகளை அரங்கேறும்.
இந்த விழாக்களை சென்னை மக்கள் கண்டுகளித்து, நம் பாரம்பரிய கலைகளைப் பாதுகாக்க வேண்டுகிறேன்!

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு