15 January 2010

அவளும் அவனும் மட்டும்...

Posted by Gunalan Lavanyan 10:57 PM, under | No comments





வானம் கறுத்து
கடற்கரையே காணாமல் போயிருந்த நேரம்.
மழைதான் வராமல் அடம்பிடித்தது.
அதைப் பார்த்து காற்று சும்மா இல்லை
வம்படியாக கைக்கொட்டிச் சிரிக்க,
அலையும் சேர்ந்துகொண்டு
கும்மாளமிட்டு பொங்கி நுரைத்தது.
இப்போது
வானம் சும்மா இல்லை
மின்னல் வேர் விட்டு வெடித்தது...
ஒளி, இடியுடன் கலந்து
பொத்துக்கொண்டு வந்தது
மழை.
காதல் பொருட்படுத்தாது
மையமிட்டிருந்தது கரையை...
மழைதான் என்ன செய்யும்..?
தூறல் குடை பிடித்துப் பார்த்துக்கொண்டது
காதலை.
அவளும் அவனும்
மழையின் குடையில் நின்று
இதழில் முத்தம் செய்யத் தொடங்கினர்...
இப்பவும் காற்று சும்மா இல்லை
குடையை வளைத்தது... நெளித்தது...
ஆனாலும், உடையவில்லை
குடை.
முத்தம் செய்தவர்கள்
இப்போது
விரல்களால் பேசத்தொடங்கினார்கள்...
அவள் இடை அவன் விரல்களோடும்
அவள் விரல்கள் அவன் கழுத்தோடும்
பேசிக்கொண்டிருந்தன...
வானம் மேகத்தோடும்
அலை கரையோடும்
காற்று மழையோடும் பேசி முடிந்தது.
இப்போது
காதல் காமம் பேசுகிறது...
யாரும் இல்லை கரையில்...
அவளும் அவனும் மட்டும்
குடை அந்தரத்தில் தொங்குகிறது...
மழை

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு