25 October 2008

இயக்குனர் அமீரும் இயக்குனர் சீமானும் தீவிரவாதிகளா..?

Posted by Gunalan Lavanyan 9:16 AM, under | No comments



இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுவரும் தமிழ் இன மக்களுக்காக குரல் கொடுத்தால், காட்டு மிராண்டி ராஜபக்சேவுக்கு எதிராக குரல் கொடுத்தால், இந்திய காங்கிரசின் அக்கிரமத்தையும் அராஜகத்தையும் கண்டித்தால்... கண்டிக்கும் தமிழ் இன உணர்வாளன் மீது இந்திய பிரிவினை வாதச் சட்டம் பாய்கிறது... இது எந்தவிதத்தில் நியாயம்? தெரியவில்லை.


சிங்கள இன வெறி அரசுக்கு ஆயுத சப்ளை செய்யும் காங்கிரஸ் தியாகிகளை எதிர்த்துக் குரல் கொடுத்தால் மத்தியில் 'கூத்து' ஆட்சி புரியும் திராவிடர்கள்... இனத் தமிழனை சிறை பிடிக்கிறார்கள்..!


பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக, ஒருபுறம் திரைப்பட இயக்குனர்களை ராமேஸ்வரத்துக்கு அனுப்பிவைத்துவிட்டு, பின்னிருந்து காங்கிரஸ் போடும் தூபத்துக்கும் தலையசைத்துவிட்டு, தமிழின உணர்வாளர்களை கைது செய்யும் உலகத் தமிழ் இனத் தலைவரை என்ன சொல்ல... அவரை ஏதாவது சொன்னால் மானமுள்ள திராவிடர்கள் பொங்கி எழுந்துவிடுகிறார்கள்.


இனியும் ஒருகணம் தாமதியோம் வரும் மத்திய பொதுத் தேர்தலில் காங்கிரசுக்கு பாடம் கற்பிப்போம்! பி.ஜி.பி. அல்லாத இடதுசாரி அணியான மூன்றாவது அணியை வெற்றி பெற செய்வோம். தமிழ் இனத்தை காப்போம்!

0 comments:

Post a Comment