13 April 2011

பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி

Posted by Gunalan Lavanyan 1:14 AM, under | No comments

வாக்களிப்பதற்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்குப் போவதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்தனர். சிறப்புப் பேருந்துகள் இல்லாததால் கூட்டநெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.



எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை தமிழகத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. அதனால், தேர்தலில் வாக்களிப்பதற்காக பெரும்பான்மையான மக்கள் காத்துக்கிடக்கிறார்கள். பணி நிமித்தமாக சொந்த ஊரில் இருந்து சென்னை வந்து வேலை செய்யும் பலர் வோட்டு போடுவதற்காக பஸ் பிடித்தி ஊருக்குத் திரும்ப கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். 

இதனால், செவ்வாய் அன்று (ஏப்ரல் 12) இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் நெரிசலில் மூழ்கியது. பேருந்தில் ஏறுவதற்குக் கூட இடம் இல்லாமல் 100 அடி சாலையில் மக்கள் நடந்தபடியே இருந்தனர். சிலர் லாரிகளிலும், பலர் சரக்கு வாகனங்களிலும் ஏறி பயணித்தனர். டாடா குட்டி யானை ஓட்டுனர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு பயணிகளிடம் வசூல் வேட்டை நிகழ்த்தத் தொடங்கிவிட்டனர். விழுப்புரம் - ரூ.200, திருவண்ணாமலை - ரூ.200, திருச்சி - ரூ.375, கும்பகோணம் - ரூ.350, மதுரை - ரூ.500 என்று வசூல் வேட்டை தொடர்கிறது.

அரசு போக்குவரத்துத் துறை சிறப்புப் பேருந்துகளுக்கு சரியான ஏற்பாடு செய்யாததால் மக்கள் இப்படி பெரும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு