இரண்டாவது திருமணத்துக்கு பிரபுதேவாவும், இரண்டாவது காதலுக்கு நயன்தாராவும் தயாரானதில் இருந்தே சினிமா வட்டாரத்தில் இவர்கள் பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன.
இந்நிலையில் இந்த கிசுகிசு ஜோடி மும்பையில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருக்கிறது. எங்கேயும் காதல் திரைப்படத்தை இயக்கியிருக்கும் பிரபுதேவா, இந்தப் படம் வெளியானதும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
முதல் காதல் மனைவி ரமலத்துடனான விவாகரத்து ஜூன் மாதம் கிடைக்கலாம் என்பதால், அந்த இனிப்புச் செய்தி (பிரபுவுக்கும் நயனுக்கும்தான்) வந்தவுடன் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் நயன்தாராவை பிரபுதேவா திருமணம் செய்யலாம் என்று தெரிகிறது. முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது காதல் திருமணம் செய்திருக்கும் பிரகாஷ்ராஜின் ஆலோசனைப்படியே, மும்பையில் திருமணம் நடக்க யிருப்பதாகக் கூறப்படுகிறது.
நயன்தாராவை எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? என்று பிரபுதேவாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, என் குடும்ப விஷயங்களை பத்திரிகைகள் மூலம் வெளிச்சம் போட விரும்பவில்லை, என்று பதில் அளித்தாராம்! ஹி... ஹி...
0 comments:
Post a Comment