10 February 2010

சொப்பன சுந்தரி!

Posted by Gunalan Lavanyan 9:29 PM, under | No comments

விலைமாதர்களுக்கு சமர்ப்பணம்...


வெம்பி வெதும்பி முளைத்தவைகள்
பஞ்சப் படர்நெருப்பில் பற்றி எரிய
இச்சைத் துடுப்புகளை வீசி
படகோட்டும் கோவலர்களின்
படகிலேறி பயணிக்க வேண்டியவளாய்
அடர்ந்த பேரிருட்டில்
சொப்பனமாய் மாறி
காமுகர்களின் களவிக்கு வழிவகுத்தாள்
துர்பாக்கிய சுந்தரி.

எச்சில் படாதவைகளும்
வலி அறியாதவைகளுமாக இருந்தவள்
காமத்துடுப்புப் போட்டு
வெளியேறுவதென முடிவெடுத்து
காட்டுத்தீயில் பொழுதுகளாய்
மல்லாந்திருக்கிறாள்
மறித்துப்போன பிணமென!

- சா.இலாகுபாரதி
(12.01.2005-ல் எழுதிய கவிதை)

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு