03 February 2010

அவள் ஒளிந்துகொண்டிருக்கும் இதயம்!

Posted by Gunalan Lavanyan 12:16 AM, under | No comments

காதல் கொண்டாட்டம்
சா.இலாகுபாரதி கவிதை – 3

எப்போதும்
நாந்தான் சொல்லவேண்டும்
என்று நினைக்கிறாய்…

ஒரு முறையாவது
நீ சொல்வாய் என்று
உன் இதயத்தின் வாசல் வரை
வந்து பார்க்கிறேன்…

நீயோ ஒளிந்துகொண்டு
கண்ணாமூச்சி ஆடுகிறாய்…

நான் எப்படி சொல்வேன்
‘நீ ஒளிந்துகொண்டு இருப்பது
என் இதயம்தான்’ என்று...

வெட்கத்தில் கண்களைப்
பொத்திக்கொள்ள மாட்டாயா..!

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு