17 January 2010

ரெட் சல்யூட்

Posted by Gunalan Lavanyan 10:57 PM, under | No comments


தோழர் ஜோதிபாசு அவர்களுக்கு ரெட் சல்யூட்

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியை,  அதன் மக்கள் ஆதரவுக் கொள்கைகளை, மக்கள் மனதில் விதைத்த தலைவர்களில் முக்கியமானவர் தோழர் ஜோதிபாசு. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வேரூன்றி, இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்பதற்கு உரமிட்ட தலைவர். தொடர்ந்து மக்களுக்காக மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்காகக் குரல் கொடுத்தவர். அவற்றை நிறைவேற்றியும் வைத்தவர்.இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு காரணமானவர்களில் முதன்மையானவர். மேற்குவங்கத்தில் தொடர்ந்து 5 முறை 23 வருடங்கள் (1977 முதல் 2005 வரை) முதல் அமைச்சராக இருந்து மக்கள் பணி ஆற்றியவர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், வேறு எந்த நபரும், இதுவரை - இப்படி தொடர்ந்து ஐந்து முறை முதல்வராகப் பொறுப்பு வகித்தது இல்லை என்பது மக்கள் தலைவர் ஜோதிபாசு அவர்களுக்கு கிடைத்த மணிமுடி. அப்படிப்பட்ட தலைவரின் மரணச்செய்தி நம்மை நீங்காத துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மாபெரும் போராட்டக்காரர், மூத்த மார்க்சியவாதி, தோழர் ஜோதிபாசு அவர்களுக்கு நமது வலைப்பூ வீரவணக்கம் செலுத்துகிறது. கம்யூனிஸ்ட்டுகளுக்கும், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களுக்கும், மேற்குவங்க மக்களுக்கும் மற்றும் தலைவரின் அனுதாபிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.

- தலைவர் ஜோதிபாசு பற்றிய சிறப்புச்செய்திகள், புகைப்படங்கள் நாளை...

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு